37வது வருடமாக பொரளை அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தினால் மீலாதுன் நபி விழா நிகழ்வுகள் நேற்று (22) நடைபெற்றது.
இந்நிகழ்வு தெமட்டகொட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வுகள் அஹதியா பாடசாலையின் அதிபர் அல்-ஹாஜ் ஷிப்லி ஹாஷிம் முன்னிலையில் இடம்பெற்றது.
ருவனிகம சமாதி நாயக்க தேரர், சிவஸ்ரீ குமாரசுவாமி குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி மற்றும் பேராயர் ஜே. ஞானராஜா பாதிரியார் உட்பட சர்வ மத தலைவர்களின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.
மேலும், இந்நிகழ்வில் அஹதியா பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட விஷேட விருந்தினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.