இஸ்லாமிய அறிவுத் துறையில் உச்சம் தொட்ட நம் நாட்டுப் பெண்.

Date:

முதல் முறையாக ரியாதில் அமைந்துள்ள அமீரா நூரா பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை ஹப்ஸா முஹம்மத் பெரோஸ் என்ற பெண்மணி தனது முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
”இமாம் இப்னு ஹஜர் ரஹ் அவர்களின் தஹ்தீபுத் தஹ்தீப் நூலில் இடம்பெறாத இமாம் புகாரியின் அத்தாரீகுல் கபீர் நூலில் இடம்பெற்ற அறிவிப்பாளர்களை ஒன்று திரட்டலும் ஆய்வு செய்தலும்” என்ற தலைப்பில் தனது ஆய்வைச் சமர்ப்பித்திருந்தார்.
இவரது தந்தை முஹம்மத் பெரோஸ் ரியாத் தஃவாக் களத்தில் மிகப் பெரும் பங்காற்றியவர் மாத்திரமின்றி தனது பிள்ளைகளை லௌகீகம் ஆன்மீகம் இரு துறைகளிலும் பரிணமிக்கச் செய்துள்ளார்.

இவரது மூத்த மகள் அல்குர்ஆனை மனனம் செய்த ஒரு வைத்தியர். அவரது கணவனும் மார்க்கப்பற்றுள்ள ஒரு வைத்தியர். ஒரு மகன் பொறியியலாளர். அவரும் அல்குர்ஆனை மனனம் செய்வதில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையில் பல முஸ்லிம் பெண்கள் முதுமாணி கலாநிதிப் பட்டங்கள் பெற்றிருந்தாலும் இஸ்லாமியக் கற்கையில் ஆய்வு சமர்ப்பித்து முதுமாணிப் பட்டம் பெற்றவர் இவராவார்.
May be an image of bread, pie, poster and text

Popular

More like this
Related

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...