பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தையை கண்காணிக்க சுயாதீன அமைப்பு!

Date:

பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகளை மேற்பார்வையிடுவதற்கு ஒரு சுயாதீன அமைப்பை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு சுயாதீனமான அமைப்பொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தை உலகின் பல நாடுகள் அங்கீகரித்துள்ளதாகவும், அதேபோன்ற அதிகார சபையை நிறுவ வேண்டியதன் அவசியத்தை இலங்கையும் தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இது தொடர்பான கூட்டுப் பிரேரணையை கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்துள்ளனர்.

இதன்படி, எம்.பி.க்களுக்கான நடத்தை விதிகளை அமைப்பது மற்றும் மேற்பார்வை குழுவை நியமிப்பது தொடர்பான அடிப்படை வரைவு சட்டமூலம் தொடர்பில் சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்களைப் பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சபாநாயகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைக் கருத்திற் கொண்டு சட்ட வரைவைத் தயாரிக்குமாறு சட்ட வரைவு தலைவருக்கு அறிவுறுத்தவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகளை மேற்பார்வையிடுவதற்கு சுயாதீன சபையொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...