பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தையை கண்காணிக்க சுயாதீன அமைப்பு!

Date:

பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகளை மேற்பார்வையிடுவதற்கு ஒரு சுயாதீன அமைப்பை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு சுயாதீனமான அமைப்பொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தை உலகின் பல நாடுகள் அங்கீகரித்துள்ளதாகவும், அதேபோன்ற அதிகார சபையை நிறுவ வேண்டியதன் அவசியத்தை இலங்கையும் தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இது தொடர்பான கூட்டுப் பிரேரணையை கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்துள்ளனர்.

இதன்படி, எம்.பி.க்களுக்கான நடத்தை விதிகளை அமைப்பது மற்றும் மேற்பார்வை குழுவை நியமிப்பது தொடர்பான அடிப்படை வரைவு சட்டமூலம் தொடர்பில் சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்களைப் பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சபாநாயகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைக் கருத்திற் கொண்டு சட்ட வரைவைத் தயாரிக்குமாறு சட்ட வரைவு தலைவருக்கு அறிவுறுத்தவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தைகளை மேற்பார்வையிடுவதற்கு சுயாதீன சபையொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...