பாலஸ்தீன தூதுவருடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தூதுக்குழு சந்திப்பு!

Date:

காஸாவில் தொடரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன மக்களுடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஜமாஅத்தின் தூதுக் குழுவொன்று அதன் பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளியன்று (27) இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் டாக்டர் சுஹைர் எம்.எச். தர் ஸைட். அவர்களை தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியது.

இதன்போது காஸா மற்றும் மேற்குக் கரையின் தற்போதைய நிலைமை குறித்து தூதுக் குழுவினருடன் கலந்துரையாடிய தூதுவர், இந்த சோகத்தின் போது பாலஸ்தீன மக்களுடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஒருமைப்பாட்டுக்காக நன்றி தெரிவித்தார்.

மேலும், இலங்கை மக்கள் பாலஸ்தீனத்தில் நீதிக்காக தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதையும் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் பாலஸ்தீன மக்களுடனான அவர்களது ஒருமைப்பாட்டையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இதன்போது தூதுக்குழுவினர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் நகலை தூதுவரிடத்தில் கையளித்தனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...