இலங்கைக்கு பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மாத்திரம் கொண்டு வர பணிப்புரை

Date:

பதிவு செய்யப்பட்ட மருந்துகளை மாத்திரம் இலங்கைக்கு கொண்டு வருமாறு சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, அவ்வாறு பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டிற்கு கொண்டு வரப்படும் பட்சத்தில் அந்த மருந்துகள் பற்றிய தேவையான தரவுகளை சரிபார்த்து தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையினால் அனுமதி பெறுமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, அரச மருந்துக் கூட்டுத்தாபனம், அரச மருந்துப் பொருட்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்ட கூட்டுத்தாபனம், மருத்துவ விநியோகப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

” மேற்படி முறைக்கு புறம்பாக எவரேனும் செயற்பட்டால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே எமது அனைவரினதும் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அதனை கூட்டாகச் செய்ய வேண்டும்.” என தெரிவித்தார்.

புற்றுநோய், சிறுநீரக நோய்கள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், இந்த மருந்துகளை தட்டுப்பாடின்றி நாட்டில் பேணுவதற்கும், சகல மருந்துகள் தொடர்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்துமாறும் சுகாதார அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

 

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....