ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு அர்ஜுண ரணதுங்க தலைமையில் 7 பேரை கொண்ட குழு நியமனம்

Date:

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு இடைகால குழுவொன்று நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

விளையாட்டு துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய  குறித்த குழுவை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையில் 7 பேரை கொண்ட குழுவொன்றே நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தற்போதைய நிர்வாகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

புதிய குழு நியமிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் வெளியானதை தொடர்ந்து, புதிய குழு தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...