கட்டணம் செலுத்தாமையால் மஹிந்தவின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு!

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததன் காரணமாக நேற்று முன்தினம் (07) மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்றாலும் பின்னர் நேற்று மின்சார சபையினால் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்கு பெறப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என அண்மையில் மின்சார சபை குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை வீரகெட்டியவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றதாகவும் அதற்காக பெறப்பட்ட மின்சாரத்திற்கு 2,682,246.57 ரூபாய் செலுத்தவில்லை எனவும் மின்சார சபை குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...