இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Date:

நாட்டின் பல பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கடுமையான மின்னல் தொடர்பான ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

மேல், மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவும், மரங்களுக்கு அடியில் செல்லாமல் இருக்கவும், இடியுடன் கூடிய மழையின் போது திறந்த வெளிகளான நெல் வயல், தேயிலை தோட்டங்கள் மற்றும் திறந்தவெளி நீர் நிலைகளை தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...