‘சீன ஜனாதிபதி ஒரு சர்வாதிகாரி : ஜோ பைடனின் விமர்சனத்தால் சர்ச்சை

Date:

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று நடைபெற்ற ‘ஏபிஇசி’ (APEC Summit பொருளாதார உச்சி நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர்.

அதன்பின் கலிபோர்னியா சென்ற ஜனாதிபதி ஜின் பிங்கை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றார். இருவரும் தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் இரு நாட்டு இராணுவ உறவு, ரஷ்யா-உக்ரைன் போர், தைவான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

வர்த்தக போக்குவரத்து, பொருளாதார தடை, அமெரிக்க வான்வெளி பகுதியில் சீன உளவு பலூன் பறந்த விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வரும் சூழ்நிலையில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்தச் சந்திப்புக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், சீன அதிபரை இன்னும் சர்வாதிகாரியாகத்தான் நீங்கள் கருதுகிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அதிபர் ஜோ பைடன், ஜி ஜின்பிங் கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி. சீன அரசாங்கம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்தார்.

நேற்றைய தினம் இருவருக்கும் இடையில் ஆக்கப்பூர்வமான சந்திப்பொன்று நடந்த பின்புலத்தில் ஜனாதிபதி பைடன் வெளியிட்டுள்ள இந்த கருத்து சீனாவை அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. நிச்சயமாக இதற்கு சீனா எதிர்வினையாற்றும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...