ஒரு மணி நேரம்தான்.. அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து கால் நடையாக வெளியேறிய நோயாளிகள்!

Date:

காசாவின் அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகள் கால் நடையாக வெளியேறியுள்ளனர்.

ஒரு மணிநேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் உத்தரவிட்டதால் நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மருத்தவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளன.

ஹமாஸ் இலக்குகளை மையமாக வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இஸ்ரேல் ராணுவம் அல் ஷிஃபா மருத்துவமனையை ஹமாஸ் குழுவினர் பதுங்கிடமாக பயன்படுத்தி வருவதாகவும் மருத்துவமனைக்கு கீழ் சுரங்கப்பாதைகளை அமைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டி வந்தது. நேற்று மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம், மருத்துவமனைக்குள் இருந்த ஹமாஸ் கட்டளை மையத்தை கண்டுப்பிடித்தது.

ஆபத்தான நிலையில் உள்ள 300 நோயாளிகள் இன்னும் அல் ஷிஃபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதும் காசா பகுதியில் உள்ள மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்டவர்களை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் இலக்குகளைத் தேடும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் நேற்றும் தொடர்ந்ததாக அல் ஷிஃபா மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையை விட்டு வெளியேற விரும்பும் மக்களுக்கு பாதுகாப்பான வழியை திறந்து வைக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்த கோரிக்கைக்கு இஸ்ரேல் இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், வடக்கு காசா பகுதியில் உள்ள “ஜபாலியா” நகரில் இரண்டு வெடிப்பு சம்பவங்களில் 80 பேர் உயிரிழந்ததாக ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களால் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 12300 ஆக உயர்ந்துள்ளது.

இடிபாடுகளுக்குள் 2000க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...