பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்: ரஞ்சித் பண்டார

Date:

தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தாம் இல்லாத நேரத்தில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கமைய, சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் உரிய குற்றச்சாட்டை ஆராயுமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தாம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அத்துடன், குற்றச்சாட்டை முன்வைத்த உறுப்பினர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தமது சிறப்புரிமைகளை மீறிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ரஞ்சித் பண்டார மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...