2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான முறையீடுகளை இணையத்தளத்தில் மேற்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, முடிவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான முறையீடுகளை நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை ஒன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நவ.16 வெளியிடப்பட்டதுடன், ஒவ்வொரு மாவட்டத்தின் சிங்கள, தமிழ் மொழி மூலமான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டன.