தடுப்பூசி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சுகாதார அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

Date:

தடுப்பூசி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட அரசாங்க மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர், கணக்காளர், உதவிப் பணிப்பாளர் மற்றும் மருந்தாளுநர் ஆகியோரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிமன்றம் நேற்று (20) உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ விநியோகப் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் தேவசாந்த சாலமன், கணக்காளர் நேரன் தனஞ்சய மற்றும் பங்குக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய மருந்தாளர் சுஜித் குமார ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (20) கைது செய்யப்பட்ட நான்கு அதிகாரிகள் நேற்று (20) பிற்பகல் மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, போலியான ஆவணங்களை தயாரித்து இலங்கைக்கு குறித்த தரமற்ற மருந்தை இறக்குமதி செய்த நிறுவன உரிமையாளரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே அதனுடன் தொடர்புபட்ட நான்கு சுகாதார அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த நிறுவனம் மூலம் மற்றுமொரு புற்றுநோய் மருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த தடுப்பூசி மருந்து 2000 நோயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...