இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதற்கிடையே பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.இதில் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன.
அப்போது பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்தது.
இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தப்படி முதல் கட்டமாக இஸ்ரேல், தாய்லாந்தைச் சேர்ந்த 25 பணயக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து இஸ்ரேல் வசம் உள்ள 39 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 17 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. இதில் 13 இஸ்ரேலியர்களும், 4 தாய்லாந்து நாட்டினரும் அடங்குவர். அவர்கள் காசா எல்லை வழியாக எகிப்தை அடைந்தனர்.
தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து பிணைக்கைதிக தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து பணயக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.