பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகளுக்கு ‘சானிட்டரி நாப்கின்’களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை

Date:

பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகளுக்கு அடுத்த வருடம் முதல் சானிட்டரி நாப்கின்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியானது பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டமாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த வேலைத்திட்டத்தின் ஆரம்பத்தில் முன்னோடித் திட்டமாக மூன்று இலட்சம் சிறுமிகளுக்கு இந்த சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் எனவும் பின்னர் அது 10 இலட்சமாக அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...