ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சில தொல்பொருட்கள் மீண்டும் நாட்டிற்கு…!

Date:

1756ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சில தொல்பொருட்கள் உத்தியோகபூர்வமாக மீண்டும் இன்றைய தினம் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த தொல்பொருட்கள், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன.

கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் குறித்த தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது 6 தொல்பொருட்களை இலங்கைக்கு மீண்டும் ஒப்படைப்பதற்கான உரிமை பரிமாற்றல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருந்த 6 தொல்பொருட்கள், இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இன்று அதிகாலை குறித்த தொல்பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...