ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சில தொல்பொருட்கள் மீண்டும் நாட்டிற்கு…!

Date:

1756ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சில தொல்பொருட்கள் உத்தியோகபூர்வமாக மீண்டும் இன்றைய தினம் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த தொல்பொருட்கள், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன.

கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் குறித்த தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது 6 தொல்பொருட்களை இலங்கைக்கு மீண்டும் ஒப்படைப்பதற்கான உரிமை பரிமாற்றல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருந்த 6 தொல்பொருட்கள், இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இன்று அதிகாலை குறித்த தொல்பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...