அமைச்சர் சாந்த பண்டார, பா.உ. Dr.சரத் வீரசேகர ஆகியோருடன் நபிகள் நாயகத்தின் குடும்பத்தினரும் பங்கேற்கும் 111 ஆவது ஆரிகாமம் கந்தூரி இன்று!

Date:

குருநாகலை, தும்மலசூரிய ஆரிகாமத்தில் அடங்கப் பெற்றுள்ள மகான் அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யித் இஸ்மாஈல் ஆரிப் வலியுல்லாஹ் அவர்களின் பெயரிலான 111 ஆவது உரூஸ் முபாரக் தமாம் மஜ்லிஸ் இன்று (02) பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகும்.
இன்றைய தினம் இரவு 11.00 மணி வரை நடைபெறும். இந்நிகழ்வின் இறுதி நிகழ்வுகள் நாளை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி பகல் 1.00 மணிக்கு நிறைவு பெறும்.

இந்நிகழ்வில் அமைச்சர் சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சரத் வீரசேகர, சுதத் மஞ்சுள, நளின் பண்டார ஜயமகா, கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், அகில இலங்கை சூபி ஆன்மீகப் பேரவையின் சட்ட ஆலோசகர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி சம்பத் தென்னகோன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளதோடு நபிகள் நாயகத்தின் குடும்பத்தாரும் கலந்து கொள்ளவுள்ளதாக அகில இலங்கை சூபி ஆன்மீகப் பேரவை தெரிவித்துள்ளது.

அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா அல்காதிரி, அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்காதிரி, அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் மர்ஸூம் மௌலானா அல்காதிரி, அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் இர்பான் மௌலானா அல்காதிரி, அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் ஹனீப் மௌலானா அல்காதிரி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...