காசா மீதான போரை நிறுத்தக் கோரி லண்டனில் மீண்டும் போராட்டம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்!

Date:

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரியும், முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தவறியதற்காக தங்கள் அரசாங்கத்தை விமர்சித்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள்  லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போர் நிறுத்தம், இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைத்தல் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு நேற்று (09)  ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர்.

காசாவில் உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தில் இருந்து லண்டன் விலகியதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள்  விமர்சித்தனர்.

காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் (யு.என்.எஸ்.சி) தீர்மானத்தில் இருந்து லண்டன்  புறக்கணித்ததால் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது.

காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 17,700 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

பாலஸ்தீன ஒற்றுமை இயக்கம், போரை நிறுத்துவதற்கான கூட்டணி மற்றும் அல் அக்ஸாவின் நண்பர்கள் ஆகிய குழுக்கள் லண்டன் பேரணியில் பங்கேற்றன,  இதில் 100,000 பேர் வரை பங்கேற்றனர்.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...