‘இதுவரை மின்தடை தொடர்பான முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை’

Date:

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பிலான முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறுமென எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மஞ்சுல பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், மின்சார சபையின் உயரதிகாரிகளை ஆணைக்குழு முன்னிலையில் அழைத்து காரணங்களைக் கேட்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை(09) மாலை 05.10 மணி அளவில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டது. சுமார் ஐந்தரை மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மின்விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடிந்ததாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொத்மலை – பியகம மின்விநியோக கட்டமைப்பில் மின்னல் தாக்கமே மின்வெட்டு ஏற்படக் காரணம் என மின்சார சபை பின்னர் தெரிவித்திருந்தது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...