2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றம்!

Date:

2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (13) நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் அங்கீகாரத்துடன் 2023ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமூலமாக நடைமுறைப்படுத்தப்படும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சர் என்றவகையில் கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

தொடர்ந்து வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் பிற்பகல் இடம்பெற்ற நிலையில், 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் நேற்று வரை நடைபெற்றது.

இதன்படி, நேற்று மாலை இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 81 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதற்கமைய, வரவு – செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...