களனிப் பல்கலைக்கழக பீடங்களின் கற்கைகள் இன்று ஆரம்பம்!

Date:

களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்ட ஏனைய பீடங்களின் கற்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதுடன் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

களனி பல்கலைக்கழக கற்கைகள் கடந்த 5ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டன.

எவ்வாறாயினும், கடந்த திங்கட்கிழமை, விஞ்ஞான பீடம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஏனைய இரண்டு பீடங்களின் கற்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கிய சம்பவத்தினாலேயே பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...