களனிப் பல்கலைக்கழக பீடங்களின் கற்கைகள் இன்று ஆரம்பம்!

Date:

களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்ட ஏனைய பீடங்களின் கற்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதுடன் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

களனி பல்கலைக்கழக கற்கைகள் கடந்த 5ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டன.

எவ்வாறாயினும், கடந்த திங்கட்கிழமை, விஞ்ஞான பீடம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஏனைய இரண்டு பீடங்களின் கற்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கிய சம்பவத்தினாலேயே பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...