‘பாடசாலை மின் கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வைக்கும் சதி’

Date:

மாத்தறை மாவட்டத்தின் வலயக் கல்விப் பிரிவில் ஐந்து தேசிய பாடசாலைகள் உட்பட 22 பாடசாலைகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் மின்சாரக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பிரிவினால் செலுத்த வேண்டிய போதிலும், மாத்தறை வலயக் கல்விப் பிரிவு நிதிப் பற்றாக்குறையினால் கட்டணம் செலுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களை பாடசாலை மின்கட்டணத்தை செலுத்த வைக்கும் அரசின் ஒருவித சதியாகவே இதை பார்க்கிறோம்.   மின்வெட்டால் பாடசாலைகளின் அனைத்து நடவடிக்கைகளும் தாமதமாகும்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.

மின் கட்டணத்தைச் செலுத்தாத கிராம அளவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு மின் இணைப்பைத் துண்டிக்கத் தொடங்கியது. அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது சொந்த கிராமத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.

மின்சார கட்டணத்தை செலுத்தாத 800,000 நுகர்வோரின் மின்சாரம் ஏற்கனவே துண்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாத்தறையில் இருந்து மின்கட்டணத்தை செலுத்த தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...