பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் பிரியாவிடை!

Date:

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக கடமை புரிந்து தனது பதவிக் காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வொன்றினை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.
சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று முன்தினம் (19) இந்நிகழ்வு நடைபெற்றது.

சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் விடைபெற்றுச் செல்லும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கான ஞாபகார்த்தச் சின்னத்தை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸுடன், பொதுச் செயலாளர் எம் அஜ்வதீன், முன்னாள் தலைவர்களான லுக்மான் ஷஹாப்தீன், பாகிஸ்தானுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் சட்டத்தரணி என் எம் ஷஹீட், சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் என் எம் அமீன் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

அரை நூற்றாண்டாக இலங்கையில் இயங்கி வரும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் பல்வேறு தரப்புகளுடனும் இராஜதந்திர உறவுகளை பலகாலமாக மேம்படுத்தி வருகிறது.

Popular

More like this
Related

சுற்றாடல் பிரச்சினைகளை முறையிடுவதற்கு புதிய WhatsApp இலக்கம்

சுற்றாடல் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...

இஸ்லாமிய வீரர்களுக்காக சில மாற்றங்களை செய்த FIFA: பீர் நிறுவனத்தின் லோகோக்கள் நீக்கம்.

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பம் கோரல்!

க.பொ.த சாதாரண தர 2025(2026) பரீட்சை மீள் திருத்தம் செய்வதற்கு  எதிர்வரும்...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!

கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும்...