கட்சி தீர்மானித்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்: மைத்திரி அறிவிப்பு

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபையில் தீர்மானிக்கப்பட்டால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிட தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிங்கிரிய பிரதேச பிரதிநிதிகளுக்கான நியமனம், கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கிவைக்கப்பட்டது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

அந்த வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இவர்களைத் தவிர பிரபல வர்த்தகர்களான திலித் ஜயவீர, தம்மிக்க பெரேரா மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கு நான்கு நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...