தேசிய மட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் புத்தளம் மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள்!

Date:

அகில இலங்கை ஷொடோகன் கராத்தே சம்மேளனத்தின் 22 வது வருட நிறைவையொட்டி நடாத்தப்பட்ட தேசிய மட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் புத்தளம் மாணவர்கள் தங்கப்பதக்கங்களை பெற்று சாதித்துள்ளனர்.

இந்த தேசிய மட்ட போட்டிகள் கொழும்பு சுகதாஸ உள்ளக விளையாட்டரங்கில் (26) நடைபெற்றது.

தேசிய மட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் WASHI SHOTOKAN KARATE DO சங்கத்தின் புத்தளம் கிளையின் மாணவர்களாகிய ஏ.எம்.அஸாம் 21 வயதுக்குட்பட்ட பிரிவிலும், யூ. தாமிர் 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட பிரிவிலும் குமித்தே போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

இவர்களை WSKA சங்கத்தின் பிரதான போதனாசிரியரும், பயிற்றுவிப்பாளருமாகிய சிஹான் எம். பெரோஸ் பயிற்றுவித்திருந்தார்.

 

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...