அபுதாபியில் இந்து கோயில் திறப்பு விழா: இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு

Date:

அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்து கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை கோயில் நிர்வாகிகள் பிரதமர் மோடியிடம் வழங்கினர்.

ஐக்கிய அமீரக ஏமிரேட்சின் அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு சார்பில் பிரமாண்டமான முறையில் இந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் 2024
பிப்ரவரி மாதம் திறக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் கோவில் நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்துத் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கினர். அதனை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் கோவிலுக்கான இடத்தை வழங்கிய அமீரக அரசுக்கு ஏற்கனவே நன்றி தெரிவித்திருந்தார்.

இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோயில் கட்ட அமீரக அரசு அனுமதியளித்துள்ளது.

அதற்காக துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டது.

கோவில் கட்டுமான பணிகளில் மொத்தம் 30 ஆயிரம் சிற்ப வேலைபாடுகளை கொண்ட கற்கள் இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.

சுவரின் அடிப்பகுதியில் கிரானைட் கற்களும் அதன் மீது இளஞ்சிவப்பு கற்களும் கொண்டு சுவர்கள் எழுப்பப்பட்டது.

கட்டிடத்தின் வெளிப்புறத்தில் கட்டப்படும் கற்கள் அனைத்தும் இந்தியாவின் ராஜஸ்தானில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதேபோல் உட்புறத்தில் உள்ள கட்டமைப்புகள் இத்தாலி நாட்டு மார்பிள் கற்களால் செய்யப்பட்டுள்ளது

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...