அபுதாபியில் இந்து கோயில் திறப்பு விழா: இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு

Date:

அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்து கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை கோயில் நிர்வாகிகள் பிரதமர் மோடியிடம் வழங்கினர்.

ஐக்கிய அமீரக ஏமிரேட்சின் அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு சார்பில் பிரமாண்டமான முறையில் இந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் 2024
பிப்ரவரி மாதம் திறக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் கோவில் நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்துத் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கினர். அதனை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் கோவிலுக்கான இடத்தை வழங்கிய அமீரக அரசுக்கு ஏற்கனவே நன்றி தெரிவித்திருந்தார்.

இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோயில் கட்ட அமீரக அரசு அனுமதியளித்துள்ளது.

அதற்காக துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டது.

கோவில் கட்டுமான பணிகளில் மொத்தம் 30 ஆயிரம் சிற்ப வேலைபாடுகளை கொண்ட கற்கள் இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.

சுவரின் அடிப்பகுதியில் கிரானைட் கற்களும் அதன் மீது இளஞ்சிவப்பு கற்களும் கொண்டு சுவர்கள் எழுப்பப்பட்டது.

கட்டிடத்தின் வெளிப்புறத்தில் கட்டப்படும் கற்கள் அனைத்தும் இந்தியாவின் ராஜஸ்தானில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதேபோல் உட்புறத்தில் உள்ள கட்டமைப்புகள் இத்தாலி நாட்டு மார்பிள் கற்களால் செய்யப்பட்டுள்ளது

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...