வரி எண் பதிவு கட்டாயம்; அபராதத் தொகை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை: நிதி இராஜாங்க அமைச்சர்

Date:

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி எண்களை பதிவு செய்வது கட்டாயம் என்றாலும், இன்னும் ரூ.50,000 அபராதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் ரூ.50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்திருந்தது.

ஆனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரி இலக்கம் பெறுவது கட்டாயமானாலும், அதனை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.50000 அபராதம் விதிக்க சட்ட ஏற்பாடு இருந்தாலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் நாட்டு மக்களை ஒடுக்குவதற்கு எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.

வரிக் கோப்பினைத் திறந்து இலக்கத்தைப் பெறுவது கட்டாயம். ஆனாலும், அந்த மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்பதில்லை என்று மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், தற்போது மாதத்திற்கு 100,000 ரூபாய் நிகர வரி வருமானம் உள்ளவர்கள் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...