சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் உயிரிழப்பு: சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Date:

சாய்ந்தமருது குர்ஆன் மத்ரஸாவிலிருந்து மாணவனின் உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மத்ரஸாவில் கல்வி கற்றுவந்த சிறுவன் கடந்த மாதம் 5 ஆம் திகதி மலசலக்கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன் போது உயிரிழந்த சிறுவனின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த வழக்குடன் நேரடியாக தொடர்புபட்ட சாட்சிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் விளக்கியதோடு, வழக்கு முடியும் வரை இந்த வழக்குகளோடு தொடர்பற்ற நேரடி சாட்சிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தடை செய்யும் முகமாக கட்டளையை வழங்குமாறு நீதிமன்றினை கோரியிருந்தார்.

இதனை கருத்தில் கொண்ட நீதிவான் சாய்ந்தமருது பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்டவர்களது முறைப்பாடுகளை பெற்று மன்றிற்கு அறிக்கை சமரப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

மேலும் சந்தேகநபருக்கு எதிராக 14 நாட்கள் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சந்தேகநபருக்கு எதிராக பிரிதொரு மாணவனை தாக்கிய சம்வம் தொடர்பில் மற்றுமொரு வழக்கு விசாரணையும் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...