மின் கட்டணத்தை குறைக்க மின்சார சபை நடவடிக்கை !

Date:

மின் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் 18% மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இந்த 18% மின் கட்டண அதிகரிப்பில் 50% குறைக்க (9%) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்மாதம் முதல் மின் கட்டண குறைப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான யோசனையை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் நோயல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பெய்த கடும் மழையினால் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் நீர்த்தேக்கங்களில் 1250 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் கொள்ளளவு காணப்பட்டது. இந்த நீர் கொள்ளளவானது அடுத்த 06 மாதங்களுக்கு தேவையான மின் உற்பத்திக்கு போதுமானதாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...