மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு தண்டனை வழங்கப்படுவதை நிறுத்துமாறும், அவரது படுகொலைக்கு காரணமானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறும் சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் குழு ‘X’ பதிவில், அவரது படுகொலைக்கு காரணமானவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
“15 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை உள்நாட்டில் தீர்த்து வைப்பதாக இலங்கை அரசு உறுதியளித்த போதிலும், விசாரணை ஸ்தம்பித்துள்ளது.
லசந்தவின் கொலைக்கான பொறுப்புக்கூறலுக்காக தொடர்ந்து போராடி வரும் அவரது குடும்பத்தினருக்கு இன்றுவரை நீதி கிடைக்காமல் போய்விட்டது” என குழு மேலும் தெரிவித்துள்ளது.
மறைந்த இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 15ஆவது நினைவு தினம் இன்று (ஜனவரி 08) அனுஸ்டிக்கப்படும் நிலையில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று காலை 09.00 மணிக்கு பொரளை மயானத்தில் லசந்த விக்கிரமதுங்கவின் கல்லறைக்கு அருகில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
அவரது குடும்பத்தாருடன் இணைந்து ஊடகவியலாளர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
லசந்த விக்ரமதுங்க, இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியரும், வழக்கறிஞரும் ஆவார்.
இவர் கொழும்பில் இருந்து வெளியாகும் த சண்டே லீடர் என்ற ஆங்கில ஞாயிறு இதழ், மற்றும் புதன் தோறும் வெளிவரும் “மோர்ணிங் லீடர்” வார ஏட்டின் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.
இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.