வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு: கறுப்பு ஆடையில் பாராளுமன்றம் வந்த எதிர்க்கட்சியினர்

Date:

புத்தாண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

முதல் பாராளுமன்ற அமர்விலேயே அரசாங்கத்துக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிகள் கறுப்பு ஆடைகளை அணிந்தவாறு பாராளுமன்றத்துக்கு வந்தனர்.

இதுதொடர்பில் கருத்து வெளியட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,

”நாட்டு மக்கள் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாகத்தான் இன்று கறுப்பு உடையில் பாராளுமன்றத்துக்கு வந்துள்ளோம்.” என்றார்.

எவ்வாறாயினும், தலதா அத்துகோரள, கபீர் ஹாசிம் உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதாரண உடையிலேயே பாராளுமன்றத்திற்கு வந்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...