இனவாதம், மதவாதம் பற்றியே பேசுகிறோம்; கண்ணுக்குத் தெரியாத ஒரு பிரச்சினை சாதிய பாகுபாடு: நல்லிணக்க அலுவலகத்தின் ஊடாக தீர்வு கிடைக்க வேண்டும்

Date:

நாட்டில் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என அனைத்து பகுதிகளிலும் சாதியப் பாகுப்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் இன்னமும் தொடர்கின்றன. அதற்கு உரிய தீர்வுகள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஊடாக கிடைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக சட்டமூலம் மற்றும் தேசிய நீரியல் சட்டமூலம் மீது இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

”இன, மதப் பிரச்சினைகளுக்கு அப்பால் சாதிய ரீதியாக மக்கள் பாரிய ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதியர்கள் எனக் கூறப்படுபவர்களை இன்றும் கிராமங்களில் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

நாம் இனவாதம் மற்றும் மதவாதம் பற்றியே பேசுகிறோம். கண்ணுக்குத் தெரியாத ஒரு பிரச்சினையாக இது உள்ளது. வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகப் பகுதிகள் என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்க்கின்றன.

அரசியலிலும் இந்தப் பிரச்சினை காணப்பட்டது. சம்பிரதாயப்பூர்வமான இந்த சாதிய முறையை உடைத்தெறிந்து அதனை சவாலுக்கு உட்படுத்திய ஒரே தலைவர் ரணசிங்க பிரேமதாசதான்.

வேறு எந்தவொரு தலைவராலும் இதனை செய்ய முடியாது போனது. ஆகவே, நல்லிணக்க அலுவலகத்தின் ஊடாக காலாதி காலமாக தொடரும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுவொன்றை பெற்றுக்கொடுப்பதும் அவசியமாகும்.” என்றார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...