பேச முடியாமல் திக்குமுக்காடிப் போன பைடன்:காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து கூச்சிலிட்ட பலஸ்தீனிய ஆதரவாளர்கள்.

Date:

இஸ்ரேலுடன் சேர்ந்து தொடரும் மனிதப்படுகொலைகளை நிறுத்தக் கோரி மனிதாபிமானமுள்ள அமெரிக்க மக்கள் பைடனின் சபையில் சத்தமிட்டு குறுக்கிட்டனர்.
“இங்கு இழந்த உயிர்களைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், நீங்கள் உயிர்களை மதிக்க வேண்டும், மேலும் பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்” என்று ஒரு பெண் கூச்சலிட்டார்
ஆரம்பத்தில் ஒரு சிலர் மட்டும் கோஷமிட்ட போதும் பிறகு முழு சபையும் சேர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கினார்.

இதனையடுத்து பைடன் மக்களுக்கு சொன்ன பதில், உங்கள் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன் மற்றும் காசாவில் அதன் நடவடிக்கைகளை குறைக்க இஸ்ரேலை தள்ள என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்.

எவ்வாறாயினும்,  இஸ்ரேல் ஹமாஸ் போரில் 23,000 பேர் பலியாகியதுடன், பெரும்பாலும் பலஸ்தீனிய பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள்,பலியாகியுள்ளனர்.

 

பெருகிவரும் இறப்பு எண்ணிக்கை மற்றும் காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், பைடன்நிர்வாகம் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது குறித்து குறிப்பாக மக்களிடம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...