இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் கௌசல்யா நவரத்ன

Date:

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவராக மீண்டும் சிரேஷ்ட சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன, பதவியேற்கவுள்ளார்.

2024-2025 ஆம் காலக்கட்டத்துக்கு அவர் போட்டியின்றி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, BASL இன் செயலாளராக சதுர கல்ஹேனவும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 50 ஆவது பட்டமளிப்பு விழாவில் இவர்கள் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை பெறுப்பேற்கவுள்ளனர்.

BASL இன் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கான வேட்புமனுக்கள் நேற்று (10) சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தேமுனி டி சில்வாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நவரத்ன இரண்டாவது முறையாக BASL இன் தலைவர் பதவிக்கு வேட்புமனுவை சமர்ப்பித்திருந்த நிலையில், கல்ஹேனவும் செயலாளர் பதவிக்கான வேட்புமனுக்களை கையளித்திருந்தார்.

இந் நிலையில் வேறு வேட்பு மனுக்கள் இல்லாதமையினால் இவர்கள் இருவரும் போட்டியின்றி குறித்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...