தரமற்ற மருந்து இறக்குமதி: சந்தேக நபர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Date:

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்வனவு தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தா உள்ளிட்ட ஏழு சந்தேக நபர்களுக்கான விளக்கமறியல் இன்று (17) மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 07 சந்தேக நபர்களையும் ஜனவரி 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

சந்திரகுப்தா, டிசம்பர் 18 ஆம் திகதி, மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகள் கொள்வனவு முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான போது கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 14 அன்று, மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம, ‘தரமற்ற’ மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் (IVIG) மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுவதாக அறிவித்திருந்தார்.

அதேநேரம், தரமற்ற மருந்து கொள்வனவு செய்து விநியோகித்தமை தொடர்பில் பொறுப்புவாய்ந்த சகல தரப்பினரையும் கைது செய்து, பாகுபாடின்றி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...