தரமற்ற மருந்து இறக்குமதி: சந்தேக நபர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Date:

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்வனவு தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தா உள்ளிட்ட ஏழு சந்தேக நபர்களுக்கான விளக்கமறியல் இன்று (17) மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 07 சந்தேக நபர்களையும் ஜனவரி 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

சந்திரகுப்தா, டிசம்பர் 18 ஆம் திகதி, மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகள் கொள்வனவு முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான போது கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 14 அன்று, மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம, ‘தரமற்ற’ மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் (IVIG) மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுவதாக அறிவித்திருந்தார்.

அதேநேரம், தரமற்ற மருந்து கொள்வனவு செய்து விநியோகித்தமை தொடர்பில் பொறுப்புவாய்ந்த சகல தரப்பினரையும் கைது செய்து, பாகுபாடின்றி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...