பணயக் கைதிகளுடன் சென்ற ரஷ்ய இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 74 பேரின் நிலை என்ன?

Date:

65 உக்ரைன் பணயக் கைதிகளுடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

பணயக் கைதிகளுடன் சென்ற இராணுவ விமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து இருநாட்டு எல்லையிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் பணயக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி, ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருந்து 65 உக்ரைன் பணயக் கைதிகளுடன் இராணுவ விமானம் புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உக்ரைன் எல்லைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.

கீழே விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்த வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமானத்தில் உக்ரைன் பணயக் கைதிகள் 65 பேர் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 74 பேர் பயணம் மேற்கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், 74 பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

உக்ரைன் பணயக் கைதிகளுடன் சென்ற ரஷ்ய விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்தும், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்தும் ரஷ்ய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உக்ரைன் பணயக் கைதிகளுடன் சென்ற இராணுவ விமானம் விபத்தில் சிக்கியதால் இருநாட்டு எல்லையில் மேலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...