சனத் நிஷாந்தவின் மரணத்தை பாற்சோறு சமைத்து கொண்டாடிய மக்கள்: உண்மை தகவல் என்ன?

Date:

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த  விபத்தில் மரணமடைந்ததையடுத்து, சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சனத் நிஷாந்தவின் மறைவால் மகிழ்ச்சியடைந்த மக்கள் நெடுஞ்சாலையில் பால்சோறு சமைத்து கொண்டாடியதாக சமூக ஊடகங்களில் புகைப்படமொன்றும் பகிரப்பட்டு வருகின்றது.

சனத் நிஷாந்தவின் மரணத்தினால் பொரளை மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பால் சோறு சமைத்து மகிழ்ச்சியை கொண்டாடுவதாகவும் தெரிவித்து, “பொரளையின் தற்போதைய நிலைமை” என குறிப்பிடப்பட்ட இந்த புகைப்படம் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

குறித்த பதிவிற்கு சமூக வலைதளங்களில் பலரும் தமது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், குறித்த பதிவின் உண்மைத் தன்மையை Fact Seeker ஆராய்ந்துள்ளது. இதன்படி, குறித்த பதிவு தவறாக பகிரப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் 2022 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பதை Fact Seeker உறுதிசெய்துள்ளது. 2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக மகிந்த இராஜபக்ஷ அறிவித்ததையடுத்து, பஞ்சிகாவத்தை பிரதான வீதியில் மக்கள் பால்சோறு சமைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படமே இதுவாகுமென தெரிவித்துள்ளது.

எனவே, சனத் நிஷாந்தவின் மரணத்தை மக்கள் கொண்டாடுவதாக பகிரப்படும் குறித்த புகைப்படம் போலியானது என்பதை Fact Seeker உறுதிப்படுத்துகிறது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...