உலகில் மிகப்பெரிய பயணிகள் கப்பல் தனது பயணத்தை ஆரம்பித்தது!

Date:

றோயல் கரீபியன் கப்பல் (Royal caribbean) நிறுவனத்திற்கு சொந்தமான 20 மாடிகளை கொண்ட Icon of the Seas ஆடம்பர சொகுசு கப்பல் நேற்று (27) அமெரிக்காவின் மியாமியில் இருந்து தனது கன்னி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

20 மாடிகளை கொண்ட இந்த கப்பல் சுமார் 8 ஆயிரம் பயணிகள், 2 ஆயிரத்து 350 ஊழியர்கள் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதுடன் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. உலகில் மிகப் பெரிய பயணிகள் கப்பல் என்ற சிறப்பும் இந்த கப்பலுக்கு உள்ளது.

திரவநிலையில் உள்ள இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் Icon of the Seas குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான கப்பல்கள் காரணமாக காற்றில் மீத்தேன் வாயு கலக்கும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வெப்பமயமாதல் விளைவுகளை எடுத்துக்கொண்டால் மீத்தேன், கரியமில வாயுவைக் காட்டிலும் மோசமானது என தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...