சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டும் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 174 பேர் பலி

Date:

இனப்படுகொலைகளை தவிர்க்குமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டு 24 மணி நேரம் கூட முடிவடையாத நிலையில் இஸ்ரேல் காஸா மீது நேற்று மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது.

ஹமாஸ் போராளிகளுடன் நடந்து வரும் போரில் மக்களைக் கொல்வதையும், அழிப்பதையும் தவிர்க்கவும், இனப்படுகொலையை தவிர்க்கவும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், காஸா மீது இஸ்ரேல் மீண்டும் இந்த கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் படையினரின் தாக்குதல் 24 மணி நேரத்தில் 174 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 310 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

காஸாவின் ரஃபாவில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...