இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

Date:

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி 76 வது சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு கொழும்பு – காலி முகத்திடலைச் சூழவுள்ள பகுதியில் வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இந்த விசேட போக்குவரத்து திட்டம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெப்ரவரி 03ஆம் திகதி வரை இந்த விசேட போக்குவரத்து தடவைகள், வீதி மூடல் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முதல் பிப்ரவரி 2ஆம் திகதி வரை காலை 06 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் பயிற்சி நடைபெறும்.

மேலும், பெப்ரவரி 03ஆம் திகதி பிற்பகல் 02.00 மணி தொடக்கம் பெப்ரவரி 04ஆம் திகதி நிகழ்வு முடியும் வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலில் இருக்கும்.

இந்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...