ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் போராட்டம் ஆரம்பம்

Date:

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நாட்டு மக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தை குறைக்கவும், மக்கள் சுதந்திரமாக வாழவும் அரசாங்கத்தை வலியுறுத்தி  ஐக்கிய மக்கள் சக்தி  ஏற்பாடு செய்த போராட்டம் சில நிமிடங்களுக்கு முன்னர் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆரம்பமானது.

“2024, ஒரு மாற்றத்தை உருவாக்கும் ஆண்டு” என்ற தலைப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள்,  அமைப்பாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமகி ஜனபலவேகவின் அனைத்து மகளிர் மற்றும் இளைஞர் கிளைகளின் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

விவசாயிகள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி ஆர்வலர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...