காசாவில் போர் நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

Date:

எகிப்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு இடையே வார இறுதியில் இடம்பெற்ற சந்திப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்க்கு இடையேயான போர்நிறுத்தம் மற்றும் காசாவில் பலஸ்தீனிய குழுக்களால் சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து மோதலை நிறுத்துவதற்கான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளை குறித்த தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வார இறுதியில் மூன்று நாடுகளின் உளவுத் தலைவர்கள் சந்திப்பை மேற்கொண்டதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளை முதலில் விடுவிப்பது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக போர்நிறுத்ததை அமுல்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கட்டார் பிரதமர் கூறியுள்ளார்.

இதேநேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்நிபந்தனையாக நிரந்தர போர் நிறுத்தத்தை ஹமாஸ் கோரியதாகவும் கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...