ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் நாற்பெரும் விழா நிகழ்வுகள்!

Date:

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டிய பொன்விழா நிகழ்ச்சித் தொடரின் மற்றுமொரு வரலாற்று நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.45 மணிக்கு ஜாமிஆ நளீமிய்யா கலாபீட மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

ஜாமிஆ நளீமிய்யா கலாபீட நிர்வாக சபையும் ராபிததுந் நளீமிய்யீன் பேருவளை வலயமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

விசேட அதிதியாக நளீமிய்யா பரிபாலன சபைத்தலைவர் யாகூத் நளீம் மற்றும் கௌரவ அதிதியாக கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.எஸீ அகார் மொஹமட் நளீமி ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

நிகழ்வில் நளீமிய்யாவின் ஜம்பதாண்டு நிறைவையொட்டிய நினைவு முத்திரை வெளியீடு,நளீமிய்யா உருவாக்கத்திற்கு நளீம் ஹாஜியாருடன் இணைந்து உழைத்த ஸ்தாபகர்களை கௌரவிக்கும் ஸ்தாபகர் தினம் நளீமிய்யாவின் உருவாக்க வரலாற்று நூல் வெளியீடு நளீமிய்யா உருவாக்கத்திற்கு நளீம் ஹாஜியாருடன் இணைந்து உழைத்த ஸ்தாபகர்களை கௌரவிக்கும் ஸ்தாபகர் தினம் நளீமிய்யாவின் உருவாக்க வரலாற்று நூல் வெளியீடு மற்றும் நளீமிய்யா கலாபீடத்துக்கான  சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டமும் இந்நிகழ்வின் போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...