ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் நாற்பெரும் விழா நிகழ்வுகள்!

Date:

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டிய பொன்விழா நிகழ்ச்சித் தொடரின் மற்றுமொரு வரலாற்று நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.45 மணிக்கு ஜாமிஆ நளீமிய்யா கலாபீட மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

ஜாமிஆ நளீமிய்யா கலாபீட நிர்வாக சபையும் ராபிததுந் நளீமிய்யீன் பேருவளை வலயமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

விசேட அதிதியாக நளீமிய்யா பரிபாலன சபைத்தலைவர் யாகூத் நளீம் மற்றும் கௌரவ அதிதியாக கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.எஸீ அகார் மொஹமட் நளீமி ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

நிகழ்வில் நளீமிய்யாவின் ஜம்பதாண்டு நிறைவையொட்டிய நினைவு முத்திரை வெளியீடு,நளீமிய்யா உருவாக்கத்திற்கு நளீம் ஹாஜியாருடன் இணைந்து உழைத்த ஸ்தாபகர்களை கௌரவிக்கும் ஸ்தாபகர் தினம் நளீமிய்யாவின் உருவாக்க வரலாற்று நூல் வெளியீடு நளீமிய்யா உருவாக்கத்திற்கு நளீம் ஹாஜியாருடன் இணைந்து உழைத்த ஸ்தாபகர்களை கௌரவிக்கும் ஸ்தாபகர் தினம் நளீமிய்யாவின் உருவாக்க வரலாற்று நூல் வெளியீடு மற்றும் நளீமிய்யா கலாபீடத்துக்கான  சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டமும் இந்நிகழ்வின் போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...