பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான்கான் ஆதரவு சுயேட்சை கட்சிகள் முன்னிலையில்

Date:

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் சற்று முன்னர் வரை பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

336 இடங்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் 266 வேட்பாளர்கள் நேரடி வாக்களிப்பு மூலம் தேந்தெடுக்கப்படவுள்ளனர்.

மீதமுள்ள 70 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கப்பட்ட இடங்களில், 60 பெண்களுக்கும், 10 முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவை சட்டமன்றத்தில் ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒரு தனிப்பெரும்பான்மையைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 133 இடங்கள் தேவை, ஆனால் தேர்தல் முடிவு ஒரு தீர்க்கமான வெற்றியை அளிக்காது என்று பல ஆய்வாளர்களால் ஊகிக்கப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்புடன் (PTI) இணைந்த சுயேட்சை கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன.

அவர்கள் 49 இடங்களை கைப்பற்றியதாக தேசிய தேர்தல்கள் ஆணையக தகவல்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி 39 இடங்களை கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) 30 இடங்களில் உள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இஸ்லாமாபாத் பொலிஸார் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து தலைநகரில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...