கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி மீது தாக்குதல்: பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம்

Date:

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை கூட்டத்தில்   திணைக்கள அதிகாரி ஒருவர்  ஆசிரிய சங்க உறுப்பினரால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் இன்று குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆசிரிய இடமாற்றம் தொடர்பிலான மேன்முறையீட்டுச்சபை கூட்டம் கூடப்பட்ட பேது, அதில் பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கும் ஆசிரியர் சேவை சங்க உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பேது, கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி , ஆசிரிய சங்க உறுப்பினரால் தாக்கப்பட்டதோடு அதிகாரி ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

அதனை கண்டிக்கும் முகமாகவே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் விடயம் தொடர்பிலான மகஜர் ஒன்று கிழக்கு மாகாண கல்வித் திணைக்களச் செயலாளரிடம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...