காசாவில் உணவிற்கு கடும் தட்டுப்பாடு; ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளும் நிலைமை: அரசியல் ஆய்வாளர்கள் வேதனை

Date:

இஸ்ரேல் – காஸா இடையிலான போர் 143வது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ் படையினரை ஒடுக்க நினைத்து, ஒட்டுமொத்த காஸா பகுதியையும் உருக்குலைத்து வருகிறது இஸ்ரேல் இராணுவம்.

ரஷ்யா – உக்ரைன் போரை விட காஸா மீதான தாக்குதல் மிகவும் கொடூரமாக அரங்கேறி வருகிறது. இதை இனப் படுகொலை என்று சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

காஸாவின் உள்கட்டமைப்பு வசதிகள் தரைமட்டமாகி வரும் சூழலில் அடிப்படை தேவைகளுக்கு பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு காஸாவில் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்கள் பசியுடன் இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை. விலங்குகள் உண்ணும் உணவை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கு ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளும் நிலை காணப்படுகிறதாம். இத்தகைய சூழலை காஸா தனது வரலாற்றில் ஒருபோதும் கண்டதில்லை என அரசியல் பார்வையாளர்கள் வேதனையுடன் பதிவு செய்கின்றனர்.

இந்நிலையில் தங்களது உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ள தெற்கு காஸா பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளனர்.

போதிய எரிபொருளும் கிடைக்கவில்லை. இதனால் பலர் நடந்தே இடம்பெயர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி காஸா மக்கள் கூறுகையில், வடக்கு பகுதியில் வாழ்வது மிகவும் கடினமாக மாறியுள்ளது. இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களை எதிர்கொள்ள தயங்கவில்லை. மோசமான அரசியல் சூழலுக்கு அஞ்சவில்லை. எங்களால் பசியை தாங்க முடியவில்லை.

https://twitter.com/UNRWA/status/1762064318558842961?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1762064318558842961%7Ctwgr%5Ef1a9bc2bfd6f6e95202157e33f9f9a13097a9b58%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Flatest-news%2Finternational-news%2Fhungry-palestinians-from-north-to-south-gaza-to-seeking-food-amid-israel-war%2Farticleshow%2F108012461.cms

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...