நாஸ் கலாச்சார நிலையத்தில் நபிகளாரின் வாழ்க்கை வரலாறு கண்காட்சி நாளை முதல்

Date:

நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை சிறுவர்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் மற்றும் ஏனையவர்களுக்கும் எடுத்துரைக்கும் வகையிலான கண்காட்சியொன்றினை நாஸ் கலாச்சார நிலையமும் தாருல் குர்ஆன் லி பராஇமுல் ஈமானும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கண்காட்சியில் நபியவர்களின் பிறப்புக்கு முன்பிருந்த ஜாஹிலிய்யாக் கால மக்களின் வாழ்க்கை, நபியவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன்னரான வாழ்க்கை, மக்காக் காலம், மதீனாக்காலம், நபியவர்களின் குடும்ப வாழ்வும் முகாமைத்துவமும், நபியவர்களின் ஆளுமைமிக்க வாழ்வியல் கலைகளும் தத்துவங்களும் எனும் தலைப்புக்களில் கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாளை (மார்ச் 01) பி.ப.2.30 க்கு அதிதிகளின் பிரசன்னத்துடன் உத்தியோகபூர்வமாக வெல்லம்பிட்டி நாஸ் கலாச்சார நிலையத்தில் ஆரம்பிக்கப்படும் இந்தக் கண்காட்சி பொது மக்கள் பார்வைக்காக 2,3,4 ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் குர்ஆன் மத்ரஸா மற்றும் அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் முஸ்லிமல்லாத பல சகோதரர்களும் இந்தக் கண்காட்சிக்கு வருகை தரவுள்ளனர்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...