பலஸ்தீன சுகாதார பணியாளர்கள் சுட்டுக்கொலை:சமாதான பேச்சுவார்த்தைக்கு பாதிப்பு

Date:

பலஸ்தினிய சுகாதார பணியாளர்களை இஸ்ரேல் இராணுவம் நேற்று வியாழக்கிழமை சுட்டுக்கொன்றுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக காத்திருந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது 112 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 280 பேர் காயமடைந்துள்ளதாக பலஸ்தினிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரே வாரத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதல் சம்பவமானது சமாதான பேச்சுவார்த்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம், சமாதான பேச்சுவார்த்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமான என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கேட்ட போது, பாதிப்பை ஏற்படுத்தலாம் என பதிலளித்துள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களில் இதுவரை 30000 வரை காசாவில் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...