‘மொட்டு ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலில் யாரும் வெல்ல முடியாது’

Date:

பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலில் யாரும் வெல்ல முடியாது என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து  இன்று இலங்கைக்கு வந்தடைந்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

“எதிர்வரும் தேர்தல்களில் எமது கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தவே இலங்கை வந்துள்ளேன். எமது பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவின்றி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரும் வெற்றி பெற முடியாது. கடந்த காலத் தேர்தல்களை போன்றே எதிர்வரும் தேர்தல்களிலும் எமது கட்சி பாரிய மக்கள் ஆதரவைப் பெறும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் பசில் ராஜபக்‌ஷவுக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியிலான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளது.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...