இலங்கையில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றில் உரை

Date:

1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக 2023ஆம் ஆண்டில் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 363 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்று 308 ரூபாயாக வீழ்ச்சியடைந்து ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கை  பொருளாதாரத்தை முன்னேற்றுவது மற்றும் சர்வதேச கடன் திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி உரையாற்றினார்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வித் திட்டத்தை உயர்த்துவது போன்ற விடயங்கள் பற்றி விபரிக்கிறார்.

விவசாயத்துறை முன்னேற்றம் அதற்கான உதவித் திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாகவும் மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களுக்குரிய வற் வரிகள் போன்றவற்றை குறைப்பது பற்றியும் ரணில் விக்கிரமசிங்க தனது உரையில்  குறிப்பிட்டார். .

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...